×

ஏட்டுக்கு சரமாரி அடி 2 பேர் கைது

பல்லாவரம், மார்ச் 18: போலீஸ் ஏட்டுவை சரமாரியாக தாக்கி தப்பியோடிய 2 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பம்மல், அன்சாரி மகால் எதிரே உள்ள டீக்கடையில் கடந்த 15ம் தேதி போதையில் 2 வாலிபர்கள் தாக்கிக் கொள்வதாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், தலைமை காவலர் மனோஜ் என்பவர், அங்கு சென்று, போதையில் இருந்த பம்மலை சேர்ந்த ஷேக் (எ) ஆபிரகாம் (29) மற்றும் பம்மல், நாகல்கேணியை சேர்ந்த சக்திவேல் (28) ஆகியோரை சமாதானம் செய்தார். அப்போது, அவர்கள் இருவரும் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நாகல்கேணியில் பதுங்கியிருந்த 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...