×

மேலூர் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலம் அபகரிப்பு ஓய்வு விஏஓக்கள் உட்பட 9 பேர் மீது வழக்கு

மேலூர், மார்ச் 18: மேலூர் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக ஓய்வு பெற்ற பெண் விஏஓக்கள் 2 பேர் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அதில் ஒருவரை கைது செய்தனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே வெள்ளலூரை சேர்ந்தவர் நாராயணன் மகன் சுரேஷ். இவர் தனது 4 ஏக்கர் நிலத்தை போலியாக ஆவணங்கள் தயாரித்து, சாத்தமங்கலத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் உட்பட 9 பேர் பத்திரப்பதிவு செய்து ஏமாற்றிவிட்டதாக கீழவளவு போலீசில் புகார் செய்தார்.

இவரின் புகாரின் அடிப்படையில் சாத்தமங்கலத்தை சேர்ந்த வேலுச்சாமி, கவியரசன், அன்பரசன், பாரிதாசன், ரகுபதி, வீரணன் மற்றும் ஓய்வு பெற்ற விஏஓக்கள் ருக்குமணி, விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற தலையாரி நாகேஸ்வரன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார் பாரிதாசனை கைது செய்தனர்.

Tags : persons ,Melur ,land ,
× RELATED மாநில செஸ் போட்டியில் அரசுப்பள்ளி மாணவிகள் அசத்தல்