×

மேலூர் அருகே ரோட்டோர பள்ளத்தால் விபத்து அபாயம் அச்சத்துடன் கடக்கும் வாகன ஓட்டிகள்

மேலூர், மார்ச் 18: மேலூர் அருகே ரோட்டோரத்தில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தால் தினசரி அந்த இடத்தை வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. கொட்டாம்பட்டி ஒன்றியம் குன்னாரம்பட்டியில் இருந்து சேக்கிபட்டி செல்லும் சாலையில் மூக்கலாங்கண்மாய்கரையில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. ஏற்கனவே சாலை மிக மோசமான நிலையில் உள்ள நிலையில், இப்பெரிய பள்ளம் மேலும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கருங்காலக்குடியில் இருந்து சேக்கிபட்டி, குன்னாரம்பட்டி நத்தம் வழியாக அரசு டவுன் பஸ்களும், ஏராளமான பள்ளி வேன் மற்றும் பஸ்களும் இந்த சாலையில் தினசரி செல்கிறது. எதிர்பாராத விதமாக எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிடும் போது வாகனங்கள் இந்த இடத்தில் ஒதுக்கப்பட்டால் மிகப் பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Tags : Motorists ,accident ,Melur ,
× RELATED மேலூர் அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு