×

கால்வாயில் தவறி விழுந்தவர் பலி

மதுரை, மார்ச் 18: மதுரை காமராஜர் சாலையை சேர்ந்தவர் செல்வமணி (24). இவர் நேற்று இரவு பனையூர் கால்வாய் ஓரம் படுத்திருந்தார். அப்போது மது போதையில் இருந்ததால் தவறி கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.

போலீசார் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் அவர் குடிபோதையில் கால்வாயில் தவறி விழுந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. வேறு ஏதும் காரணம் உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : canal ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்