×

சிவகிரி அருகே மகனை வெட்டிய தந்தை கைது

சிவகிரி மார்ச் 18: சிவகிரி அருகே இனாம்கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் மார்த்தாண்டன்(30). திருமணம் ஆகவில்லை. மார்த்தாண்டன் ஊதாரி தானமாக சுற்றியதால் அவருக்கும், தந்தை செல்லையாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மதியம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மார்த்தாண்டனுக்கும் செல்லையாவுக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லையா, மகன் மார்த்தாண்டனை அரிவாளால் வெட்டினார். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இது குறித்து சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து மகனை வெட்டிய தந்தை செல்லையாவை கைது செய்தனர்.

Tags : Sivagiri ,
× RELATED குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது