×

பாளையில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

நெல்லை, மார்ச் 18:  பாளையில் பள்ளி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மேலப்பாளையம் அடுத்துள்ள வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கல்லத்தியான் (22). இவர் பாளையில் கட்டிட வேலைக்கு சென்ற போது அப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வரும் சிறுமியிடம் மோசடியாக பழகி, சிறுமியின் கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் நகையையும் பெற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் பாளை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கல்லத்தியானை போக்சோ சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

Tags : Lawyer ,
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது