×

வரும் 27ம் தேதி திருமணம் தூக்குபோட்டு ஆசிரியை சாவு

புதுச்சேரி, மார்ச் 18:  வரும் 27ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், தூக்குபோட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். புதுவை, காமராஜர் சாலை, சாரதி நகர், 4வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம், இளநீர் வியாபாரி. இவரது மகள் லட்சுமி (23). இவர் நகர பகுதியில் உள்ள ஒரு முன் மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
அதன்படி வருகிற 27ம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் லட்சுமிக்கு இதில் விருப்பமில்லை என தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Teacher ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...