×

இளம்பெண் மாயம்

காலாப்பட்டு, மார்ச் 18: புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட தந்திராயன்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மகள் சவுமியா(21). இவர் கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் ேதடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை ெஜயவேல், கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிந்து மாயமான இளம்பெண் சவுமியாவை தேடி வருகிறார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு