×

பாகூர் அருகே இருதரப்பினர் மோதல் 5 பேர் மீது வழக்கு

பாகூர், மார்ச் 18: பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முரளி (34), தனியார் கம்பெனி ஊழியர். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஞானசேகரன் (34). இருவருக்கும் இடம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முரளி குடும்பத்தினர், பிரச்னைக்குரிய இடத்தில் வேலி போட்டுள்ளனர். இதனால் மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இது தரப்பினரும் கல் மற்றும் கடப்பாரையால் தாக்கிக் கொண்டனர். இதில் 2 தரப்பையும் சேர்ந்த 3 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக முரளி கொடுத்த புகாரின் பேரில் ஞானசேகரன், வெங்கடேசன், மணிரத்தினம் ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் முரளி, சுகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : persons ,Pakur ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது