×

லாரி மோதி வாலிபர் பலி

பண்ருட்டி, மார்ச் 18:  பண்ருட்டி அருகே லாரி மோதி வாலிபர் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சிவராமன் மகன் மணிபாலன் (20), இவர் டிப்ளமோ படித்துள்ளார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த அப்பர் மகன் தீனதயாளன் (23) என்பவரும் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் அங்குசெட்டிப்பாளையம் ரோட்டில் வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்குநேர் மோதிக்கொண்டனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் மணிபாலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தீனதயாளனை அப்பகுதி மக்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Lorry ,youngster ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது