×

கடலூர் துறைமுக பணியை விரைந்து முடித்திட வியாபாரிகள் வலியுறுத்தல்

கடலூர், மார்ச் 18: கடலூர் முதுநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் துறைமுக பணியை விரைந்து முடித்திட உணவுப்பொருள் வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கடலூரில் உணவுப்பொருள் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார் . பொருளாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம், செயலாளர் வேல் சங்கர்,  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நகர தலைவர் ஜி. ஆர் துரைராஜ்,  செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு உணவு பாதுகாப்பு சட்டம் குறித்தும் சில்லரை வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்வது குறித்தும் விளக்கி பேசினர்.

கூட்டத்தில் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூருக்கு ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும். கடலூர் துறைமுகத்தை மீண்டும் சிறப்பு வாய்ந்த பகுதியாகவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் துறைமுக திட்ட பணியை விரைந்து முடித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் மார்க்கெட் செயலாளர் நடராஜன், ஏஜென்சி தலைவர் பாரஸ் மல் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி நன்றி கூறினார்.

Tags : merchants ,Cuddalore ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...