×

நீலகிாியில் 6 வட்டங்களில் 20ம் தேதி சிறப்பு திட்ட முகாம்

ஊட்டி, மார்ச் 18: நீலகிாியில் உள்ள 6 வட்டங்களில் வரும் 20ம் தேதி வருவாய்த்துறை சார்பில் சிறப்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. நீலகிாி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில் முதியோர் ஓய்வூதிய தொகை, விதவை உதவித்ெதாகை, நலிந்தோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை மற்றும் வருவாய்த்துைற மூலம் வழங்கப்படும் சான்றுகள், ேரஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுத்துறை சார்ந்த குறைகள் கேட்கப்பட்டு நிவர்த்தி ெசய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு சிறு தொழில் உதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 20ம் தேதி நீலகிாி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது.

இதன்படி, ஊட்டி வட்டத்திற்குட்பட்ட நடுவட்டம், அனுமாபுரம் சமுதாய கூடத்திலும், குன்னூர் வட்டத்தில் மேலூர்-2, மேலூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், கோத்தகிாி வட்டத்தில் கடினமாலா, குள்ளங்கரை சமுதாயக் கூடத்திலும் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. குந்தா வட்டத்திற்குட்பட்ட மேல்குந்தா, கூர்மையாபுரம் சமுதாய கூடத்திலும், கூடலூர் வட்டத்தில் பாடந்தொரை-2, கர்க்கப்பாளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, பந்தலூர் வட்டத்தில் நெல்லியாளம்-2, பிதிர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. இதில் பொதுமக்கள் தங்களது கோாிக்கை மனுக்களை அளித்து தீர்வு பெற்று கொள்ளலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Special Project Camp ,Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்