×

டிக்-டாக் தகராறு வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

சூலூர், மார்ச் 18: டிக்-டாக் தகராறு காரணமாக வாலிபரை சரமாரியாக தாக்கிய 3 பேரை சூலூர் போலீசார் கைது செய்தனர். சூலூர் அருகே உள்ள அரசீர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் மதனகண்ணன் (25). இவரும், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த மாரிமுத்து (27), திண்டுக்கல் நத்தத்தைச் சேர்ந்த அம்சத்ராஜா (35) தென்காசியைச் சேர்ந்த பிரதீப் (27) ஆகியோரும் கடந்த ஓராண்டாக டிக்-டாக் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில், 4 பேரும் டிக்-டாக் பதிவில் ஒருவரை ஒருவர் தாக்கி நடித்து அதை வெளியிட்டுள்ளனர். இதனால்,  ஆத்திரமடைந்த மாரிமுத்து, அம்சத்ராஜா, பிரதீப் ஆகியோர் மதனகண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி, 3 பேரும் கடந்த சனிக்கிழமை இரவு அவர் பணிபுரியும் நிறுவனத்துக்கு சென்று மதனகண்ணனை வெளியே வரவழைத்து சரமாரியாக தாக்கியதுடன் கழுத்தைப் பிடித்து நெறித்தனர். இதில், அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து மதனகண்ணன் சூலூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாரிமுத்து, அம்சத்ராஜா, பிரதீப் ஆகிய மூவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...