×

பணத்தகராறில் ரிக் அதிபருக்கு அடி, உதை பெண் உள்பட மூவர் கைது

திருச்செங்கோடு, மார்ச் 18: பணத்தகராறில், ரிக் அதிபரை அடித்து, உதைத்ததாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன்(28). ரிக் அதிபரான இவரும், கூட்டாளிகளும் திருச்செங்கோடு பரமசிவ கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவரிடம் ரிக் வண்டியையும், ஒரு லாரியையும் வாங்கினர். இதுதொடர்பாக பணத்தகராறு இருந்து வந்தது. நேற்று பணம் கேட்பதற்காக சென்றபோது அன்பரசு வீட்டில் இல்லாத நிைலையில், அவரது மனைவி பானுமதி, தம்பி பூபதி ராஜா, ரிக் வண்டி மேலாளர் குமார்  ஆகியோர் சேர்ந்து செந்தாமரைக்கண்ணனை  சரமாரியாக தாக்கினராம்.

இதில், படுகாயமடைந்த அவர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழகுப்பதிந்து பானுமதி, பூபதிராஜா, குமார் ஆகியோரை கைது செய்தனர். திருச்செங்கோடு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நீதிபதி முருகவேல் 15 நாள் காவிலில் வைக்க உத்தரவிட்டார் மேலும், விசாரணை நடந்து வருகிறது.

Tags : Rick Chancellor ,
× RELATED திருச்செங்கோடு அருகே கந்துவட்டி...