ஈரோடு, மார்ச் 18: ஈரோடு பகுதிகளில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மக்கள் கூடும் இடங்கள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மஞ்சள் மார்க்கெட்டிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழா, தெலுங்கு வருடபிறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை மஞ்சள் வர்த்தகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு வரும் 23ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை மஞ்சள் வர்த்தகத்திற்கு விடுமுறை விடப்படவுள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 8ம் தேதி முதல் மஞ்சள் வர்த்தகம் வழக்கம்போல செயல்படும் என தெரிவித்துள்ளார்.