×

காரிமங்கலம் அருகே பழுதடைந்த அங்கன்வாடி மையம்

காரிமங்கலம் மார்ச் 18: காரிமங்கலம் அருகே இடிந்து விழும் நிலையில் இருக்கும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.முருக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த  20குழந்தைகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் அங்கன்வாடி மையத்தை முறையாக சீரமைக்காததால், மேற்கூரைகள் சேதமடைந்து, கான்கிரீட் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

கான்கிரீட் உதிர்வதால், அங்கன்வாடி மைய பணியாளர்கள், அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளை அழைத்து சென்று பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி, பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. எனவே புதிய அங்கன்வாடி மையத்தை விரைவில் திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi Center ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் காலனியில்...