×

ஓசூர் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் லேப்டாப் திருட்டு

ஓசூர், மார்ச் 18: திருச்சி அருகே உள்ள துறையூர் ஒப்பிலியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்குமார்(29). டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பஸ்சில் ஓசூர் பஸ் நிலையம் வந்த அவரின் லேப்டாப் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஜெய்குமார் ஓசூர் டவுன் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : bus station ,Hosur ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்