×

ஓசூரில் முன்விரோத தகராறில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து

ஓசூர், மார்ச் 18: ஓசூர் ஜூஜூவாடி ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் பிரபாகர்(20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(18) என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஜூஜூவாடி கருமாரியம்மன் கோயில் அருகே மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பிரபாகர் மற்றும் 17 வயதான 2 சிறுவர்கள் கண்ணன் மற்றும் அவரது நண்பர் யஸ்வந்த்குமாரை(18) கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நேற்று முன்தினம் சிப்காட் போலீசில் கண்ணன் புகாரளித்தார். அதன்பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபாகர் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : men ,Hosur ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்