×

வீட்டின் முன் நிறுத்திய ஆட்டோ திருட்டு

தர்மபுரி, மார்ச் 18: தர்மபுரி குமாரசாமிபேட்டை உழவன்தெரு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (58). இவர் சொந்தமாக மினி ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி ஆட்டோவை வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் நிறுத்தி விட்டு, குடும்பத்துடன் மாதேஸ்வரன்மலைக்கு சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மாயமாகியிருந்தது.  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பத்குமார் அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால் ஆட்டோ குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தர்மபுரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...