×

தகராறில் எலக்ட்ரீஷியன் கொலை

திருச்சி, மார்ச் 16: திருச்சி காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லூர் நல்லதம்பி கவுண்டர் ஸ்டோரை சேர்ந்தவர் மோகனசுந்தரம்(70), எலக்ட்ரீசியன். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரவு வீட்டின் முன் கட்டிலில் மோகனசுந்தரம் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சீரங்க கவுண்டர் ஸ்டோரை சேர்ந்த விஜயகுமார் மகன் கார்த்திக்(எ)சஞ்சீவி(35) அவ்வழியே வந்தார். அப்போது அந்த தெருவில் கன்றுக்குட்டி ஒன்று நின்றிருந்தது. அதை பார்த்த சஞ்சீவி வைக்கோலை எடுத்து கன்றுக்குட்டிக்கு போட்டார். இதில் மோகனசுந்தரம், சஞ்சீவிகுமார் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் சஞ்சீவி, மோகனசுந்தரத்தை கீழே தள்ளினார். இதில் காலில் பலத்த காயமடைந்த மோகனசுந்தரம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவரது மனைவி பத்மாவதி புகார் ஏதும் அளிக்கவில்லை. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மோகனசுந்தரம் இறந்தார். இது குறித்து அவரது மனைவி பத்மாவதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சஞ்சீவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags : Electrician murder ,
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை