×

வாலிபர் கைது கம்பெனி பூட்டை உடைத்து 1.10 லட்சம் பணம், ஸ்டீல் பொருட்கள் கொள்ளை

திருவெறும்பூர், மார்ச் 16: திருவெறும்பூர் அருகே தேவராய நேரியில் உள்ள ஸ்டீல் கம்பெனி பூட்டை உடைத்து ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டீல் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயநேரியை சேர்ந்தவர் பரத்(47). இவர் அந்த பகுதியில் ஸ்டீல் கம்பெனி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது கம்பெனியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பரத் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கம்பெனி அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.ஒரு லட்சத்தி 10 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டீல் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பரத் துவாக்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : robbery ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...