×

தேனூரில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு

மதுரை, மார்ச் 17: அரசு புறம்போக்கு இட ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மதுரை மாவட்டம் தேனூரை சேர்ந்த ராஜேந்திரன் தலைமையில் அந்த ஊரைச் சேர்ந்த சிலர் நேற்று கலெக்டர் வினயிடம் புகார் மனு கொடுத்தனர். இம்மனுவில், ‘‘கிராமத்திற்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த இடத்தில் குப்பை, கழிவுநீர் விட்டும், பொதுமக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையில் இடையூறு செய்தும் வருகிறார். ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், அந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக வாடிப்பட்டி தாசில்தார் விசாரிக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Tags :
× RELATED வத்திராயிருப்பு அருகே பாப்பநத்தம் ஓடையில் பெருக்கெடுத்த வெள்ளம்