×

காரைக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு

காரைக்குடி, மார்ச் 17:  காரைக்குடி, சுப்பிரமணியபுரம் 9வது வீதியை சேர்ந்தவர் சுதீஸ் மனைவி ஜெபக்கனி(39). நேற்று அதிகாலை வீட்டின் அருகே நடந்து சென்ற போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஜெபக்கனியை கீழே தள்ளி கழுத்தில் கிடந்த 9பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Jewel ,Karaikudi ,
× RELATED வங்கியில் பணியாற்றும் நகை...