×

ஓய்வூதியம் பெறுபவர்கள் நேரில் வர அறிவுறுத்தல்

சிவகங்கை, மார்ச் 17:  சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு பெற்று ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் நேரில் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் உஷா விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு பெற்று ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் 2020ம் ஆண்டிற்கான ஆயுள் சான்று சமர்ப்பிக்க ஏப்.1 முதல் ஏப்.30ம் தேதி வரை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்.  

நேரில் வரும்போது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை(அசல் மற்றும் நகல்), வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வரவேண்டும். தவறும் பட்சத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும். கூடுதல் விபரம் அறிய  04575-240320என்ற தொழிலாளர் உதவி ஆணைய அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : pensioners ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்