×

வெளிமார்க்கெட்டில் மாஸ்கை அதிக விலைக்கு விற்கக்கூடாது கலெக்டர் உத்தரவு

மதுரை, மார்ச் 17: வெளிமார்க்கெட்டில் மாஸ்கை அதிக விலைக்கு விற்பனை செய்ய கூடாது என கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நேற்று மதுரையில் கலெக்டர் வினய் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், டீன் சங்குமணி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ், ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் கலெக்டர் வினய் கூறியதாவது: மாவட்டத்தில் எல்கேஜி முதல் 5வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோன்று, அங்கன்வாடி மையம், பிளே ஸ்கூல் ஆகியவையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் எந்தமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...