×

மனைப்பட்டா கேட்டு பழங்குடி இருளர்கள் ஆட்சியரிடம் மனு

விழுப்புரம், மார்ச் 17:  திண்டிவனம் அருகே மேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பழங்குடி இருளர் மற்றும் வேட்டைகயூர் இன மக்கள் வீட்டு மனை பட்டா கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பாக்கம் கிராம மக்கள், ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த பகுதியில் உள்ள குளக்கரையில் 50 ஆண்டுகளாக நாங்கள் வசிக்கிறோம். எங்கள் பகுதியில் பழங்குடி இருளர் எட்டு குடும்பங்களும், வேட்டைகயூர்கள் 18 குடும்பங்களும் வசிக்கின்றனர்.

எங்களில் சிலருக்கு சாதிச்சான்று இல்லை. மனு கொடுத்தும், வருவாய்த்துறை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் மற்றும் அதிகாரிகள் எங்கள் பகுதியை பார்த்து, விரைவில் வீட்டு மனைபட்டா வழங்குவதாக உறுதியளித்தனர். எனவே எங்களுக்கு வீட்டு மனை பட்டாவை விரைவாக ஆட்சியர் வழங்க உதவ வேண்டும் என கூறியிருந்தனர்.

Tags : Darkers ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை