×

தாசில்தார் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

திருக்கோவிலூர், மார்ச் 17: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் எல்ராம்பட்டு கிராமத்தில் குடியிருக்கும் 130 தாழ்த்தப்பட்ட குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா கடந்த 1994ம் வருடம் உளுந்தூர்பேட்டை ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் மூலம் நில அளவை செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த நாள் வரை கிராம வருவாய் கணக்கில் இணைக்கப்படாத காரணத்தால் அரசு சலுகை, வங்கி கடன் பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எல்ராம்பட்டு வீட்டு மனைகளை வருவாய் கணக்கில் ஏற்றி, அடங்கல் வழங்கக்கோரி பலமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமையில் பாதிக்கப்பட்ட 130 குடும்பங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தார் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது தாசில்தார் சிவசங்கரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசி 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Dasildar ,office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...