விருத்தாசலம், மார்ச் 17: விருத்தாசலத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. மருத்துவர் சேதுபதி தலைமை தாங்கினார். மருத்துவர் கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் புரிந்த சாதனைகள் பற்றியும், எதிர்காலத்தில் மகளிர்கள் எதிர்நோக்கும் வழிமுறைகள் குறித்தும், பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் சிறந்த சமூக சேவகர்கள், சிறந்த மாணவி, சிறந்த இல்லத்தரசி என பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.