×

கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் கிருமி நாசினி தெளிப்பு

கொடைக்கானல், மார்ச் 17: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கொடைக்கானல் நகராட்சி தொடங்கி மேற்கொண்டு வருகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதன்காரணமாக பேருந்து நிலைய வளாகம் முழுவதும் கொடைக்கானல் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதேபோல பேருந்து நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிவறைகள், இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதேபோல கொடைக்கானல் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் இதுபோன்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags : Kodaikanal ,bus stand ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...