×

பழநியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

பழநி, மார்ச் 17: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன்படி பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப்பிரிவின் சார்பில் கவுண்டன்குளம், ஜீவானந்தம் தெருவில் தெருத்தூய்மை மற்றும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சித்த மருத்துவமனை டாக்டர் மகேந்திரன், வீடுகள் மற்றும் தெருக்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலும், கொரோனா வைரஸ் பரவும் முறை, அறிகுறிகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். இதுதொடர்பாக அப்பகுதி குடியிருப்புவாசிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் மூலிகைச் செடிகள் வைப்பதென்றும், உடலை தூய்மையாக வைத்துக் கொள்வதென்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தெருமுனைப் பிரச்சாரத்தில் கவுண்டன்குளம் குடியிருப்புவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,Palani ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...