×

திருவையாறில் உலக மகளிர் தினவிழா

திருவையாறு, மார்ச் 17: திருவையாறில் திருவையாறு மண்டல பெண்கள் கூட்டமைப்பு வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கும்பகோணம் பல்நோக்கு சமூகபணிமையம் ஆகியவை இணைந்து உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு மகராஜபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் சுஜாதா பாஸ்கரன் தலைமை வகித்தார். ஒன்றிய பெண்கள் கூட்டமைப்பு தலைவி மேனகா வரவேற்று பேசினார். விழாவில் திருவையாறு மாவட்ட உரிமையியில் நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான தனசேகரன், திருவையாறு பங்குத் தந்தை பீட்டர் பிரான்சிஸ், குடந்தை பல்நோக்கு சமூகப்பணி மைய செயலர் அருட்தந்தை ராபர்ட், அரசர் கல்லூரி பேராசிரியை மணிகுமாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். சங்க நிர்வாகிகள் புனிதா ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் ஆலீஸ்மேரி, கல்லூரி மாணவி ராதிகா ஆகியோர் தொகுத்து வழங்கினார். பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முடிவில் ஒன்றிய பெண்கள் கூட்டமைப்பு செயலாளர் ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.

Tags : World Women's Day ,Thiruvaiyar ,
× RELATED திருவையாறு கோயிலில் சித்திரை...