×

கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் கூடும் இடங்களில் மருந்து தெளிப்பு

அந்தியூர், மார்ச் 17:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் பரவி வருகிறது. இதையொட்டி, அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்ஒருபகுதியாக, அந்தியூரில் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பேருந்து நிலையம், மற்றும் கோயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, கோயிலுக்கு வந்த பக்தர்கள் இடையே கொரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில், மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் கைலாசம், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட சுகாதார மருத்துவ பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : places ,spread ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...