×

கொரோனா எதிரொலி காரைக்கால் என்.ஐ.டிக்கு மார்ச் 31 வரை விடுமுறை


காரைக்கால், மார்ச் 17: கொரோனா எதிரொலி காரணமாக காரைக்கால் என்.ஐ.டிக்கு வரும் மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என என்.ஐ.டி இயக்குனர் சங்கரநாராயணசாமி அறிவித்துள்ளார். இது குறித்து காரைக்கால் என்.ஐ.டி இயக்குனர் சங்கரநாராயணசாமி, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றுநோய் எதிரொலி காரணமாக, வரும் 31ம் தேதி வரை, தேசிய தொழிற்நுட்ப கழக அனைத்து வகுப்பு, ஆய்வுக்கூடம், பிற நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன. தங்கும் விடுதியில் உள்ள இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவ, மாணவியர்கள், விடுதியை காலி செய்துவிட்டு அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறது. தொலைதூரத்துக்கு செல்லக்கூடிய மாணவர்கள், செல்லக்கூடிய சூழல் இல்லாதபட்சத்தில் விடுதி தலைமை காப்பாளர் அனுமதியுடன் விடுதியிலேயே தங்கியிருக்கலாம். விடுதியைவிட்டு வெளியே செல்லக்கூடாது. மாணவர்கள் தொடர்ந்து தேசிய தொழிற்நுட்ப கழகத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவலைக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Holidays ,Corona Echo Karaikal NIT ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...