×

தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரதம்

நாகை, மார்ச் 17: ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை அறிவிக்க கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நாகை அவுரித்திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் ஜீவாபாரதி வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். மண்டலச் செயலாளர் பட்டாபிராமன் கண்டன உரையாற்றினார். குடும்பன், காலாடி, பன்னாடி, தேவேந்திரகுலத்தான், பாதிரியான், பள்ளான் உட்பட ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை அறிவிக்க கோரி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.

Tags : government ,Tamilnadu People's Development Association ,Devendrakula Vellayar ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...