×

வேதாரண்யம் அருகே முதியவர் தற்கொலை

வேதாரண்யம், மார்ச் 17: வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(60). இவர் உடல்நலக்குறைவால் கஷ்டப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல்நலம் அதிகமாக பாதிக்கப்பட்டதால் வீட்டில் மாமரத்திற்கு தெளிக்க பயன்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையிலிருந்த அவரை அருகில் இருந்தவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு இருந்து தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்தார். இது குறித்து அவரது மகன் வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப் இன்ஸ்பெக்டர் விஜயசுந்தரம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags : suicide ,Vedaranyam ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை