×

சமுதாய நிர்வாகிகள் கூட்டம்

கடையநல்லூர், மார்ச் 17: கடையநல்லூரை அடுத்த ஊர்மேலழகியான், அச்சம்பட்டி, பொய்கை ஆகிய கிராமங்களை சேர்ந்த இந்து தொழுவ நாயக்கர் சமுதாய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பொய்கை கதிர்வேல்முருகன் தலைமை வகித்தார். ஊர்மேலழகியான் வக்கீல் முத்துக்குமாரசாமி, அச்சம்பட்டி ராஜாஜி குலசேகரன், சங்கரன், ஜெயக்குமார், நாராயணன், சங்கரபாண்டியன், வடிவேல்முருகன், முத்து, சங்கரபாண்டியன், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் இந்து தொழுவ நாயக்கர் சமுதாயத்தினருக்கு கடந்த 25 ஆண்டுகளாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் இம்மாதம் 20ம் தேதி கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Community administrators meeting ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி