×

கரூரில் சுட்டெரிக்கும் கோடைவெயில்

கரூர், மார்ச் 17: கரூரில் கடந்த ஒரு வாரமாக கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கரூரில் வடகிழக்கு பருவமழை சீசன் முடிவடைந்து இரண்டு மாதங்கள் முடிவடைந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் வரை இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்ததால் பகலில் வாட்டிய வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது, பனிப்பொழிவு நின்று வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கரூர் மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இதனால் சாலையோரமாக தற்காலிக குளிர்பான கடைகள் ஆங்காங்கே செயல்படுகிறது. உடல் சூட்டை தணிக்க மக்களும் இளநீர், தர்பூசணி, கரும்புச்சாறு, சர்பத் போன்ற குளிர்பானங்களை வாங்கு அருந்துகின்றனர். கோடை துவக்கத்துக்கு முன்னரே இந்தளவுக்கு வெயில் வாட்டி வதக்கும் நிலையில், உச்ச வெயில் காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என இப்போது பொதுமக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

கரூர் நகரை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை சீசன் துவங்குவதற்கு முன்னதாக, சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் வெயிலை பொதுமக்கள் எளிதாக சமாளித்து விடுவார்கள் என்பதால் அந்த காற்று காலத்தையும் மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றிய பகுதியில் 36.5 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்துவதால், பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஒன்றிய பகுதியில் ஆண்டுக்கு 9 மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். போதிய மழை இல்லாததால் இந்த பகுதியில் விவசாயம் அழிவின் விளிம்புக்கு சென்று விட்டது. இந்தாண்டு வட கிழக்கு பருவமழை சரி வர பெய்யாததால், அமராவதி, காவிரி, ஆறுகளும், ராஜவாய்க்கால், எல்பிபி வாயக்கால் இதனையே நம்பியுள்ள விவசாய கிணறு போன்ற நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. கடும் வெயிலால் கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் நட மாட்டம் சற்று குறைந்து வெறிச் சோடி காணப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தால் குளிர் பானங்கள், இளநீர், நுங்கு, பத நீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. வெயில் தாக்கத்தினால் சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள் அவ திப்படுகின்றனர்.க.பரமத்தியில் கடந்த நாள்களாகே குறிப்பாக நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை 6மணி வரை 36.5டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால், பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில், பூமியின் தட்ப வெப்ப நிலை பெரிய அளவில் மாறி வருகிறது. பருவ காலங்களில் மழை பெய்வதில்லை. குளிர் காலங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. தற்போதே வெயிலின் தாக்கம் இவ்வாறு இருந்தால் அக்னி நட்சத்திரத்தில் மிகவும் கடும் உக்கிரமாக இருக்கும். இதனால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.வாகன புகை, காற்று மாசு, புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு காரணங்களால் தட்ப வெப்ப நிலை மாறி வருகிறது. எனவே, இயற்கையை பாது காக்கவும் வீட்டிற்று ஒரு மரம் வளர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றனர்.

Tags : Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...