×

குறைதீர் கூட்டத்தில் மனு மக்கள் குறைதீர் கூட்டம் 274 மனுக்கள் குவிந்தன

கரூர், மார்ச் 17: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீட்டு மனைப்பட்டா, வேலை வாய்ப்பு, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி உட்பட பல்வேறு கோரிக்கை சம்பந்தமாக பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 274 மனுக்களை துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த முகாமில், கிருஷ்ணராயபுரம் தாலுகா பாப்பாக்காபட்டியை சேர்ந்த ரத்னகிரி என்பவரின் மகள் பாம்பு கடித்து உயிரிழந்ததால், முதல்வரின் பொது நிவாரண நிதியாக ரூ. 50ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் உறவினர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரெங்கராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா உட்பட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags : petitions ,
× RELATED 5 ராஜ்குமார், 3 ராமச்சந்திரன் கோவையில் போட்டி