×

க.பரமத்தி காவல்நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்ட 3 வாலிபர் கைது

க.பரமத்தி, மார்ச் 17: மனுவிற்கு உடனடியாக தீர்வு சொல்ல வேண்டும் என வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி அடுத்த முசிறி அருகே கீழ்சந்தாபாளையத்தை சோந்தவர் தங்கராஜ் மகன் ரகுபதி (28). இவர் தனியார் பேருந்து ஒன்றில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இவரது நண்பர்கள் குளித்தலை அருகே பேராளம்மன்கோவில்தெரு விஜயகுமார் மகன் கணபதி(27), திருச்சி அருகே முசிறி அந்தரப்பட்டி நல்லதம்பி மகன் திவாகர்(24) ஆகியோருடன் விசாரணைக்காக இன்று (17ம் தேதி) காலை 10 மணிக்கு க.பரமத்தி காவல் நிலையம் ஆஜராக போலீசார் வரச்சொன்னதால் அது சம்மந்தமாக மூன்று பேரும் நேற்று க.பரமத்தி காவல்நிலையத்திற்கு சென்று விவரம் அறிந்து பின்னர் வெளியில் வந்தனர். இந்நிலையில் டிரைவர் ரகுபதி ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்த பெண்ணுடன் உடனே தன்னை சேர்த்து வைக்ககோரி தனது ஆதரவாளர்கள் கணபதி, திவாகர் ஆகியோருடன் தனது மனுவிற்கு உடனடியாக தீர்வு சொல்ல வேண்டும் என காவல் நிலையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் போலீசார் நீண்ட நேரம் எடுத்துரைத்தும் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் மேற்கண்ட மூவர் மீது வழக்குபதிந்து மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : paramedics ,
× RELATED சித்த மருத்துவர்கள் ஆபரேஷன் அனுமதியை...