×

ஓட்டப்பிடாரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு பிரசாரம்

ஓட்டப்பிடாரம், மார்ச் 17: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஓட்டப்பிடாரம் வட்டக்கிளை சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது.  ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்ட இப்பிரசாரத்திற்கு வட்டத் துணைத்தலைவர் மீனா தலைமை வகித்தார். கோரிக்கைகள் குறித்து வட்டச்செயலாளர் ஞானமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கம், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க கமிட்டிக்குழு செயலாளர் திருமாலை ஆகியோர் பேசினர். மாநில துணைத்தலைவர் தமிழரசன் மக்கள் சந்திப்பில் கூறவேண்டிய கருத்துக்கள் பற்றி எடுத்துரைத்தார்.    இதில் தனியார் அமைப்பு மூலம் அரசால் செயல்படுத்தப்பட உள்ள பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டத்தை அரசே ஏற்று நடத்துவது, சத்துணவு ஊழியர்களின் நலனை காப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வட்ட பொருளாளர் மஞ்சுளா நன்றி கூறினார். இதில் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெண் சத்துணவு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Nutrition Employees Union Public Meeting ,
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு