×

சிறு தொழில் துவங்க பூசாரிகளுக்கு கடனுதவி

நாமக்கல், மார்ச் 17: சிறு தொழில் துவங்க பூசாரிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டுமென கூடுதல் தலைமை செயலரிடம் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். சென்னை  தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  சந்தீப் சக்சேனாவை,  கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாசு,  மாநில செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் சுந்தரம் ஆகியோர்  நேரில்  சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், பூசாரிகள்  ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும், பூசாரிகளுக்கு புத்தொளி பயிற்சி முகாம்  நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 75 சதவீத மானியத்துடன் இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனக்  கடன் வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு நிதி நிறுவனங்கள் மூலம் சிறு தொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : priests ,businesses ,
× RELATED உஜ்ஜயினி மஹாகாலேஷ்வர் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் காயம்!