தர்மபுரி, மார்ச் 17: கொரோனா வைரஸ் எதிரொலியாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 17 சினிமா தியேட்டர்கள் இன்று(17ம் தேதி) முதல் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, காரிமங்கலம், அரூர், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், பொம்மிடி ஆகிய இடங்களில் 17 திரையரங்குகள் இயங்கி வருகின்றன. காலை, பிற்பகல், இரவுக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்தது. அதன்படி தர்மபுரியில் 5 தியேட்டர், காரிமங்கலம் 3, அரூரில் 2, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, கம்பைநல்லூர், பொம்மிடி ஆகிய இடங்களில் உள்ள 17 தியேட்டர்களும் இன்று (17ம் தேதி) முதல் வரும் 31ம் தேதிவரை மூடப்படுகிறது. இந்த தகவலை திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.