×

கல்பாக்கம் அருகே கடலில் விழுந்த மீனவர் சாவு

திருக்கழுக்குன்றம், மார்ச் 17: கல்பாக்கம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் இறந்தார்.கல்பாக்கம் அடுத்த மெய்யூர் குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன் (54). மீனவர். நேற்று காலை பரசுராமன், மீன் பிடிக்க படகில் கடலுக்கு சென்றார். நடுக்கடலில், மீன் பிடிக்க வலையை வீசும்போது வலை, பரசுராமனின் காலில் சிக்கியது. இதனால், நிலைதடுமாறி அவர், கடலில் விழுந்து தத்தளித்தார்.

அந்த நேரத்தில், அங்கு மற்ற படகுகளில் மீன்பிடிக்க வந்த மீனவர்கள், கடலில் குதித்து தண்ணீரில் தத்தளித்த பரசுராமனை மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர்.தகவலறிந்து சதுரங்கப்பட்டினம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : fisherman ,Death ,Kalpakkam ,sea ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...