×

வீடு புகுந்து தொடர் திருட்டு: 2 பேர் சிக்கினர்

குன்றத்தூர், மார்ச் 17: குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளையை சேர்ந்தவர் மகேஷ் (35). அதே பகுதியில் கேட்டரிங் வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மகேஷ், தனது வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த இரண்டு விலை உயர்ந்த  செல்போன்கள் மற்றும் கைக்கடிகாரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது.

புகாரின்படி குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.மேலும், மகேஷின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது, குன்றத்தூர், கரைமா நகரை சேர்ந்த சின்னத்தம்பி (20), அவரது உறவினர் சுரேஷ் (22) ஆகியோர் பயன்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.விசாரணையில், தினமும் இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்டு செல்போன், லேப்டாப் ஆகியவற்றை திருடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.

Tags : House ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்