×

காரிமங்கலம் அருகே மாயமான நர்ஸ் காதலனுடன் மீட்பு

காரிமங்கலம், மார்ச் 17:  காரிமங்கலம் அடுத்த பூனார்த்தனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகள் ரூபாதேவி(23). தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி தான் படித்த கல்லூரியில் மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், பின்னர் வீடு  திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் மகளை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் எஸ்ஐ விஜயசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மோகன்ராஜ்(24) என்பவரும், ரூபாதேவியும் காதலித்து  வந்துள்ளனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை  விட்டு வெளியே சென்றிருப்பது தெரியவந்தது. மோகன்ராஜ் பெரியாம்பட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் இருந்த இருவரையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து ரூபாதேவி காப்பகத்திற்கு அனுப்பி  வைக்கப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : nurse boyfriend ,Karimangalam ,
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்