×

நல்லம்பள்ளி அருகே 3 டூவீலர்கள் மோதல் 6 பேர் படுகாயம்


நல்லம்பள்ளி, மார்ச் 17:  நல்லம்பள்ளி அருகே 3 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டி சதையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(35). இவரது மனைவி பூங்கொடி (33). இவர்கள் இருவரும், ஒரு டூவீலரில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பின்னால் சின்னம்பள்ளியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (25) என்பவர் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். இவர்கள் சவுளூர் பகுதியில் வந்தபோது, எதிர்திசையில் வந்த பெரியாம்பட்டியை சேர்ந்த இளங்கோ(20), சிங்காரவேல் (19), செக்காரப்பட்டியை சேர்ந்த சண்முகம் (19) ஆகிய 3 பேரும் வந்த டூவீலர், முன்னால் வந்த டூவீலர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் தமிழ்செல்வன் தலையில் பலத்த காயத்துடன், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோரிக்கை விடுதுள்ளனர்.

Tags : Nallampalli ,
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்