×

அபுதாபியிலிருந்து வந்த வாலிபர் திடீர் மரணம்: கொரோனா வதந்தியால் பரபரப்பு

சென்னை, மார்ச் 17:  அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய வாலிபர் திடீரென உயிரிழந்தார். கொரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்ததாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.மாதவரம் அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் விஜயசங்கரன் (36). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிக்காக அபுதாபி சென்று பணிபுரிந்து வந்தார். பணி முடிந்து கடந்த 9ம் தேதி வீடு திரும்பினார்.
வீட்டிற்கு வந்த மறுநாள் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

வெளிநாட்டிலிருந்து வந்த விஜயசங்கரன் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று மாதவரம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் உயிரிழந்த விஜயசங்கரன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதும், சர்க்கரை வியாதி அதிகமானதால் அவர் உயிரிழந்ததாக தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : death ,rumor spread ,Abu Dhabi ,Corona ,
× RELATED 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது..!!