×

வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு: ஆசாமி கைது

அண்ணாநகர்: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மதன்மோகன் (34). இவர் நேற்று முன்தினம் இரவு ஜெகன்நாதன் நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்களில் இருவர் பைக்கில் இருந்து இறங்கி வந்து, மதன்மோகனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த அரை சவரன் மோதிரம் மற்றும் பாக்கெட்டில் இருந்த 1000 பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து மதன்குமார் கொடுத்துள்ள புகாரின்படி, வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின் பால்சுதாகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து அதில் பதிவான பைக்கின் பதிவெண்ணை வைத்து தீவிரமாக விசாரித்தனர்.

இதனிடையே அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது பைக்கில் வந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் விரட்டிச்சென்று அவர்களில் ஒருவரை பிடித்தனர். மற்ற இருவரும் தப்பிவிட்டனர். விசாரணையில், பிடிபட்ட நபர் வில்லிவாக்கம், தாந்தோணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த தமிழ்மணி (45) என தெரியவந்தது. அவரிடம் இருந்து அரை பவுன் மோதிரம், ரூபாய் ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்மணியை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்: புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்தவர் மகேஷ் (32). இவர் அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து மகேஷ் புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து செல்போன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Azami ,arrest ,jewelery ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!