×

டீக்கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர் கைது

மன்னார்குடி, மார்ச் 17: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெப்பக்குளம் மேல்கரையை சேர்ந்தவர் ராஜ் (43), மேல நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (45). இருவரும் சேர்ந்து மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே டீக்கடை மற்றும் பேக்கரி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி அதிகாலை கடையின் தகர மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பேப்பரால் மறைத்து விட்டு கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை திருடி சென்று விட்டான். இந்த சம்பவம் அதே கடையில் மற்றொரு இடத்தில் பொருத்த பட்டிருந்த வேறொரு கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதுகுறித்து கடையின் பங்குதாரரான ராஜ் என்பவர் மன்னார்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீ சார் தீவிரமாக ஆய்வு செய்த போது கோட்டூர் அருகே நடுவளி களப்பால் அப்பியன் திருவாசல் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (43) என்பவர் டீக்கடையில் கைவரிசையை காட்டியிருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் அப்பியன் திருவாசல் கிராமத்திற்கு சென்று அங்கு பதுங்கியிருந்த லோகநாதனை கைது செய்து அவரிடமிருந்து ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Mystery man ,
× RELATED அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தின்...