×

திட்டமிட்டபடி நாளை சிறை நிரப்பும் போராட்டம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 17: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கின் வெளியிட்டுள்ள அறிக்கை: என்.பி.ஆர்க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி நாளை (மார்ச் 18ம்தேதி) சிறை நிரப்பும் போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருவாரூரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : jail ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...